Wednesday, 19 December 2012

pattinathar

பட்டினத்தார்-பாடல்கள்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து 
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி, 
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன 
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

நீறார்த்த மேனியும் ரோமஞ் சிலிர்த்து உளம் நெக்கு நெக்குச் 
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே
மாறாத் தியான முற்று ஆனந்த மேற்கொண்டு மார்பிற் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித், தினந் தினமும் 
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்தனே, கயிலாயத்தனே. 6

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப் 
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் ஐஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவன் நின் அருளால், கயிலாயத்தனே. 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி 
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும், நின் ஐஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13

பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல் 
இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப் 
பொல்லா எனைக் கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லா நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லு கண்டாய் கச்சியேகம்பனே. 32

நாறு முடலை, நரிப்பொதி சோற்றினை, நான் தினமுஞ் 
சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி 
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் அலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன் செயலே என்பார் காண் கச்சியேகம்பனே. 37

பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவை அன்னாள் 
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் உனைப் பூசியாத உலுத்த ரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கொன்றேன் அனேக முயிரை எலாம் பின்பு கொன்று கொன்று 
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்க வென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம் நீபொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள 
பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள் 
கல்லாமற் கைதவரோடு இணங்காமற் கனவினும் பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகையர் மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்ற முள்ளோரு முடிவிலொரு 
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு பின்னு இந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றே அறிவாரில்லையே. 7


அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை: 
ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே 
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் 
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை 
தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யில் தீமூட்டு வேன்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு 
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் 
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வய்க்கு.


விருத்தம்: 
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

வெண்பா: 
வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில் 
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள் 
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆனாள்- பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

உடற் கூற்று வண்ணம்:
ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது 
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் 
ஒன்ப்தும் ஒன்ற்ம் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை 
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ்மடவாரும் 
உகவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட 
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேச 
முந்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து

மயிர்முடி கோதி அறுபத நீல 
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் எனமோக 
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி 
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுத்ல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய் 
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

வளமையும் மாறி இளமையும் மாறி 
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து ந்ரைதிரை வந்து
வாதவிரோத குரோத்ம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு 
மந்தி எனும்படி குந்தி ந்டந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும் நேரம் இருமல் பொறாது 
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு

கலியுகம் மீதில் இவர் மரியாதை 
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரைதடுமாறி 
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிந்ல் ஆதரவு ஏது என நொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு 
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும் என உரைநாவு 
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோம 
முச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக 
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து ம்னைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள் 
பஞ்சு பறந்திட எஇன்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர்தாம்இ 
ருந்தசவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடும் எனஓடி 
வந்து இளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகுஇடை மூடிஅழள் கொடுபோட 
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

No comments: